தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையால் 407 குடும்பங்களைச் சேர்ந்த 1278 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் 407 குடும்பங்களைச் சேர்ந்த 1278 பேர் பாதிப்பு

தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றுவரை(12) 407 குடும்பங்களைச் 1278 சேர்ந்த பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு பல கிராமங்களில் சில பிரதேசங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாகவும், போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த வகையில் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 51 குடும்பங்களைச் சேர்ந்த 158 பேரும்,
கண்டாவளையில் 80 குடும்பங்களைச் சேர்ந்த 270 பேரும்,பூநகரியில் 86 குடும்பத்தைச் சேர்ந்த 253 பேரும், பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 190 குடும்பங்களைச் சேர்ந்த 597 பேரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொது மக்களின் தற்காலிக மற்றும் நிரந்த வீடுகளுக்கு வெள்ள நீர் புகுந்துள்ளமையால் அவர்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலக ஊழியர்கள், இராணுவம் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் மக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.