வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த 16பேருக்கு கொரோனா தொற்றுறுதி.

வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த 16பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன் ஒருபகுதி முடிவுகள் இன்று காலை வெளியாகியது. அதனடிப்படையில் வவுனியா மில் வீதியில் உள்ள வியாபார நிலையங்களில் பணிபுரியும் 16 பேருக்கு தொற்றிருக்கின்றமை உறுதி செய்யப்பட்டது. குறித்த எண்ணிக்கையுடன் வவுனியா நகர்பகுதியில் கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் 147தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.