கேகாலை தம்மிக தேனை அருந்திய பிரதேச சபை உறுப்பினருக்கும் அவரது குடும்பத்துக்கும் கொரோனா

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கேகாலயைச் சேர்ந்த தம்மிக பண்டாரா அறிமுகப்படுத்திய பாணி மருந்தை கேகாலை பிரதேச சபையின் உறுப்பினரும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அருந்தியும் அவர்கள் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

பிரதேச சபையின் உறுப்பினர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை பலுஹஸ்தெனிய பொது சுகாதார ஆய்வாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இப்போது , அவர்கள் அனைவரும் கோவிட் சிகிச்சை மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் , அவர்களது நட்பு வட்டத்தில் இருந்த சுமார் 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் .

Leave A Reply

Your email address will not be published.