மாஸ்டர் படத்தை வெளியிட்ட திரையரங்கு சீல் வைக்கப்பட்டது.

பருத்தித்துறையில் கோவிட் -19 சுகாதார கட்டுப்பாடு களை மீறி நடிகர் விஜயின் மாஸ்ரர் படத்தை வெளியிட்ட திரையரங்கு ஒன்று சுகாதாரத் துறையினரால் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் முன் அனுமதி பெறாது சுகாதார கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காது இயங்கிய திரையரங்கே இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

பருத்தித்துறைப் பகுதியில் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அண்மையில் இனங்காணப்பட்டு அவர்களுடன் நேரடித் தொடர்பைப் பேணிய இருபத்தைந்துக்கு மேற்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான பிசிஆர் முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறாத நிலையில் நாளை வரை திரையரங்கை பருத்தித்துறையில் திறக்கவேண்டாம் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைபெற்று பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியாலும் பொதுசுகாதார பரிசோதகராலும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அந்த அறிவுறுத்தலை மீறி நேற்று சனிக்கிழமை இரவு 9.30 காட்சி குறித்த திரையரங்கில் நடத்தப்பட்டுள்ளதோடு அங்கு சமூக இடைவெளி பேணாமலும் முகக்கவசங்களை சரியாக அணியாமலும் பெருமளவானோர் ஆபத்தான நிலையில் ஒன்றுகூட இடமளிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.