மஸ்கெலியா பகுதியில் ஆறு நபர்களுக்கு கொரணா தொற்று.

மஸ்கெலியா சுகாதார அத்தியாட்சகர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பி.சி.ஆர் செய்ததில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரி நரேந்திரகுமார் தெரிவித்தார்.

கடந்த 16 ஆம் திகதி பி.சி.ஆர் மேற்கொண்டதில் மஸ்கெலியாவில் பொலிஸ் பிரிவில் 4 பேருக்கும், நல்லதண்ணி பிரிவில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியுள்ளாகியுள்ளது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரி நரேந்திரகுமாரும், மஸ்கெலியா பொலிஸ் நிலைய உதவி அதிகாரி ஆனாந்த பத்மஸ்ரீயும் இணைந்து தொற்றாளர்களை தனிமைப்படுத்தப்பட்டதுடன் தொற்றாளிகளை கொரோனா தொற்று மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.