இலங்கையில் மேலும் 355 பேருக்கு கொரோனா தொற்று.

இலங்கையில் மேலும் 355 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொவிட் தொற்றுக்கானவர்களில் இன்றைய தினம் 684 பேர் பூரணமாக குணமடைந்த வௌியேறிய நிலையில் மொத்தமாக 60,567 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 332 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.