சட்ட விரோத மீன்பிடி முறைகளுக்கு எதிராக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.

திருகோணமலை மாவட்டத்தில் தொடரும் சட்டவிரோத மீன்பிடி முறையை எதிர்த்து இன்று திருகோணமலை நகரின் மத்தியில் மீனவர்கள் ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டார்கள்.

டைனமைட்,தடைசெய்யப்பட்ட வலை,தடைசெய்யப்பட்ட பிரதேசங்களில் மீன்பிடித்தல் தொடர்ந்தும் இடம்பெறுவதை கண்டித்தும் உரிய அதிகாரிகள் இதன் நிமித்தம் தமது கடமைகளை துஷ்பினயோகம் செய்வது குறித்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இலங்கை கடலோர காவல் படை,இலங்கை கடற்படை இச்சட்டவிரோத மீன்பிடி முறைகளக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்காத நிலை தொடர்ந்தும் காணப்படுவதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட முனவர்கள் கோஷம் எலுப்பினர் .

சுமார் 200 அதிகமான மீனவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.