பொதுத் தேர்தலுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி

ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்புகளுக்கு எதிராக தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் எதனையும் விசாரணைக்கு எடுக்காமலேயே தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகிய ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 18 ஆம் திகதி முதல் 10 நாட்களாக எடுக்கப்பட்ட குறித்த மனுக்களின் பரிசீலனை நேற்றையதினம் (01) நிறைவடைந்ததை அடுத்து, இன்று (02) பிற்பகல் 3.00 மணிக்கு கூடிய உச்சநீதிமன்றம் இம்முடிவை அறிவித்துள்ளது.

Comments are closed.