இலங்கையில் 76 ஆயிரத்தைத் தாண்டியது இன்றும் 774 பேருக்குக் கொரோனா.

இலங்கையில் 76 ஆயிரத்தைத் தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை! – இன்றும் 774 பேருக்குக் கொரோனா!

இலங்கையில் இன்றும் 774 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 76 ஆயிரத்து 428 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 715 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்றில் இருந்து இதுவரை 69 ஆயிரத்து 411 பேர் குணமடைந்துள்ளனர் எனவும், 6 ஆயிரத்து 614 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.