பருத்தித்துறையில் மாணவர்கள் மூவர் உட்பட 13 பேருக்குக் கொரோனா!

பருத்தித்துறையில் மாணவர்கள் மூவர் உட்பட 13 பேருக்குக் கொரோனா!

பருத்தித்துறையில் 13 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.

பருத்தித்துறையில் நடன ஆசிரியை ஒருவருக்குத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் நேரடித் தொடர்புடைய 12 பேருக்குத் தொற்று உள்ளமை என இன்றைய பி.சி.ஆர். பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 3 பேர் பாடசாலை மாணவர்களாவர்.

மேலும், மிருசுவிலில் வங்கி உத்தியோகத்தருடன் தொடர்புடைய குடும்பத்துக்குத் தொற்று உள்ளமை கடந்த வாரம் கண்டறியப்பட்ட நிலையில் அவர்களுடன் தொடர்புடைய பருத்தித்துறையைச் சேர்ந்த ஒருவர் இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் துரித நடவடிக்கையால் இந்த 13 பேருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களுடன் தொடர்புடையோர் சுயதனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.