இராணுவத்தினரால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனத்தில் ஹெரோயின் கடத்தல்.

இராணுவத்தினரால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனம் ஒன்றிலிருந்து 45 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் ஹொரணை பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இராணுவ வீரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த இரு சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகையுடன் நேரடி தொடர்பற்றவர்கள் என்றும் இதன் பிரதான சந்தேக நபர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படும் இருவராவர் என்பதும் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.