மன்னாரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இளம் குடும்பஸ்தர் பரிதாபச் சாவு!

மன்னாரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இளம் குடும்பஸ்தர் பரிதாபச் சாவு!

மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சின்ன சன்னார் கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தத் துயரச் சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றது. ஒரு பிள்ளையின் தந்தையான 27 வயது நபரே இவ்வாறு உயிரிழந்தார்.

வீடொன்றில் சுவரை இடித்து வேலை செய்து கொண்டிருந்தபோது, வீட்டின் சுவர் முற்றாக இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் இடிபாட்டுக்குள் சிக்கி படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் மீட்கப்பட்டு பள்ளமடு வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். எனினும், அதில் ஒருவரான இளம் குடும்பஸ்தர் உயிரிழந்தார்.

மேலும், அவரது சகோதரன் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.