மாவட்ட செயலக புள்ளிவிபரக்கிளை அலுவலகம் திறந்து வைப்பு!

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மாவட்ட புள்ளிவிபரக்கிளையின் அலுவலகம் இன்று(15) பி.ப 12.21 மணிக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட புள்ளிவிபரவியலாளர் இ.இராஜசூரி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நடாவினை வெட்டி குறித்த அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இதன்போது முல்லைத்தீவு சப்தகன்னியார் ஆலய பிரதம குருக்கள் அவர்களின் ஆசியுரையும், புதிய அலுவலக நிலையத்தில் பால் காய்ச்சும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் M.யேசுறெஜினோல்ட், திட்டமிடல் பணிப்பாளர் M.கிருபாசுதன், உதவி மாவட்ட செயலாளர் லிசோ கேகிதா, நிர்வாக உத்தியோகத்தர் திருமதி.சு.விக்கினேஸ்வரன், கிளைத்தலைவர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.