விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே பலி.

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் யட்டியாந்தொட்டை-கொமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹட்டன் நகரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்றும் கரவனெல்ல பிரதேசத்தில் இருந்து யட்டியாந்தொட்டை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் குறித்த நபர் தெஹியோவிட்ட ,தங்கம்பலை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சடலம் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவத்துடன் தொடர்புடைய வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணை யட்டியாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.