தூதரகத்தின் அழுத்தத்தையடுத்து வடக்கு கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்கள் விடுதலை.

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் நேற்றுமுன்தினம் இலங்கைக் கடற்படையினரால் கைதாகிய 54 இந்திய மீனவர்களில் 40 பேர் அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மன்னார் மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்பில் கைதானவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணக் கடற்பரப்பில் கைதாகிய 14 மீனவர்களுக்கும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமையால் அவர்கள் எதிர்வரும் 8ஆம் திகதி வரை காரைநகர் கடற்ப்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படாத கைதாகிய 40 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தின் அழுத்தத்தையடுத்து குறித்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.