கொரோனாவால் திணறும் இலங்கை! – மேலும் 892 பேருக்குத் தொற்று.

இலங்கையில் மேலும் 892 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று மாலை ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதற்கமைய, இலங்கையில் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 271 பேருக்கு இதுவரையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 266 பேர் இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால், நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 577 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை இலங்கையில் 644 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.