மக்களிடம் ஒப்படைக்கப்பட்ட காணிகளை மீண்டும் சுவீகரிக்கும் நோக்கம் எமக்கில்லை! தளபதி தெரிவிப்பு.

“மக்களிடம் ஒப்படைக்கப்பட்ட காணிகளை மீண்டும் சுவீகரிக்கும் நோக்கம் எமக்கு இல்லை. ஆனால், நீங்கள் குறிப்பிடும் விடயம் தொடர்பில் ஆராய்கின்றேன்.”

இவ்வாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஊடகங்களிடம் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசின் காலத்தில் காங்கேசன்துறையில் விடுவிக்கப்பட்ட தனியார் காணிகளை இராணுவத்தினர் மீளக் கையகப்படுத்துவது தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மக்களிடம் ஒப்படைக்கப்பட்ட காணிகளை நாம் மீள ஆக்கிரமிக்கவில்லை. அவற்றைச் சுவீகரிக்கும் நோக்கமும் எமக்கு இல்லை. காங்கேசன்துறையில் நீங்கள் குறிப்பிடும் விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கின்றேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.