இலங்கையில் அதிகரிக்கும் ‘கொரோனா’ காவு! – இன்று மேலும் 13 சாவுகள் பதிவு;

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் இன்றிரவு அறிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 709 ஆக அதிகரித்துள்ளது.

திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயது பெண், ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயது பெண், மாவில்மட பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயது ஆண், நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயது ஆண், மாலபே பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயது ஆண், மாலபே பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயது பெண், பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயது ஆண், நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயது ஆண், முகத்துவாரம் பிரதேசத்தைச் சேர்ந்த 79 வயது பெண், நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயது ஆண், பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயது பெண், புலத்சிங்ஹல பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயது ஆண், கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயது பெண் ஆகியோரே கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் பட்டியலில் இன்று பதிவாகியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.