நாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச இன்று காலை நாடாளுமன்றத்துக்கு திடீர் விஜயம் செய்தார்.

ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர்களான கனக ஹேரத், டி.வி.சானக ஆகியோர் நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் ஜனாதிபதியை வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட அமைச்சர்களுடன் நாடாளுமன்ற சபை மண்டபத்துக்கு வந்த ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோருடன் சபையில் அமர்ந்தார்.

ஜனாதிபதி சபையில் அமர்ந்திருந்தபோது வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன உரையாற்றினார்.

சிறிது நேரத்தில் சபையிலிருந்து வெளியேறிய ஜனாதிபதி, நாடாளுமன்றத்தில் உள்ள தனது அலுவலகத்துக்குச் சென்றார்.

Leave A Reply

Your email address will not be published.