மட்டக்களப்பில் கார் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலி

இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலே இருவர் பலியாகியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்றுகொண்டிருந்த கார் , மட்டக்களப்பு – மியான்குளம் சந்தியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் மட்டக்களப்பு தனியார் பஸ் உரிமையாளர் பரமேஸ்வரன் தனுயன் என்பவரும், அவருடன் சேர்ந்து பயணித்த வினோகா துரைசிங்கம் என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளார்கள்.

விபத்துக்குள்ளான இருவரது சடலமும் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொள்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.