இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் கொரோனா அச்சம் நீங்க வேண்டி யாழில் விசேட வழிபாடுகள்!

இலங்கையிலும் இந்தியாவிலும் நிலவும் கொரோனா அச்சம் நீங்க வேண்டி யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் மற்றும் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் ஆகியவற்றிலேயே இன்று மாலை இந்த விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இந்த வழிபாடுகளில் யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் துணைத்தூதுவர் பாலச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளும், யாழ். மாவட்ட அரசியல்வாதிகளான தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோருடன் மேலும் சிலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.