ஆளில்லா வீட்டில் திருட்டில் ஈடுபட்ட 8 பேர் சிக்கினர்!

ஆள்ளில்லா வீட்டில் நீண்ட நாட்களாகத் திருட்டில் ஈடுபட்டு வந்த 8 பேர் இரவோடு இரவாக யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 7 இலட்சத்துக்கும் அதிகமான திருட்டுப் பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

யாழ். வேம்படி பாடசாலைக்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றிலே குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. வீட்டின் உரிமையாளர்கள் வெளிநாடு ஒன்றில் வசித்து வருகின்ற நிலையில் வீட்டை உறவினர் ஒருவர் பராமரித்து வந்த நிலையில் அங்கு அடிக்கடி திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.