அலரி மாளிகையில் மஹிந்தவை அவசரமாகச் சந்தித்த சீனத் தூதர்! – கொரோனாத் தடுப்பு தொடர்பில் முக்கிய பேச்சு

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஜன்ஹொங் இன்று (12) நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார நட்புறவு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

சீன ஜனாதிபதியின் வாழ்த்துக்களை சீனத் தூதுவர், பிரதமர் மஹிந்தவுக்கு இதன்போது எத்திவைத்துள்ளார்.

இலங்கையில் கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இந்தச் சந்திப்பில் பிரதமர் மஹிந்த எடுத்துக் கூறியுள்ளார்.

இலங்கைக்கு சீன தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.