யாசகர்களுக்கு தேவையான பகல் சாப்பாடு வழங்கிய அஷார்தீன் மொய்னுதீன்

குருநாகல் பொலிஸாரின் வேண்டுகோளின் பிரகாரம் கொரோனா ஊரடங்கு காரணமாக அரசாங்கத்தினால் மூன்று நாள் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டமை அடுத்து குருநாகல் நகர வீதிகளில் அநாதரவாக இருக்கும் சுமார் 100 யாசகர்களுக்கு தேவையான பகல் சாப்பாடு உணவு பொதிகளை குருநாகல் மாநகரசபை உறுப்பினர் அஷார்தீன் மொய்னுதீன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது குருநாகல் பிரதி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர சமன் உதவி பொலிஸ் அதிகாரி சமன் திசாநாயக்க குரு நாகல் பொலிஸ் பொறுப்பதிகாரி அதிகாரி உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்கு கொண்டு வழங்கி வைத்ததை படங்களில் காணலாம்.

– இக்பால் அலி

Leave A Reply

Your email address will not be published.