மல்லாவியில் அடையாள அட்டை இலக்க நடைமுறை பொலிசாரினால் கண்காணிப்பு!

நாடாளாவிய ரீதியில் கடந்த மூன்று நாட்களாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை அதிகாலை 4.00மணிமுதல் விலக்கிக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து தேசிய அடையாள அட்டை இலக்க நடைமுறை முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவியில் காவல்துறையினரால் அடையாள அட்டை பரிசோதனை தீவரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மல்லாவி நகருக்குள் நுழையும் பொது மக்கள் அனைவரிடமும் மல்லாவி பொலிசார் மற்றும் இராணுவத்தினரால் அடையாள அட்டை பரிசோதிக்கப்படுகிறது

அரசினால் நடைமுறைப் படுத்தப் பட்டுள்ள புதிய நடைமுறையின்படி இன்றைய தினத்தில் பயணிக்க கூடியவர்கள் மட்டும் பொலிசாரால் தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் ஏனையோர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்ப படுகின்றார்கள்.

தொழில் நிலையங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் கடமை புரிவோர்அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் தவிர்ந்த ஏனையோர் அனைவரும் அடையாள அட்டை பரிசோதனையின் பின்னரே அனுமதிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.