கொழும்பு துறைமுகப்பகுதியில் பற்றி எரியும் பாரிய கப்பல்!

கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில், கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கப்பலொன்றிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

தற்போது, கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கடற்படையினரும், துறைமுக அதிகார சபை அதிகாரிகளும் ஈடுப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.