கணவனும், மனைவியும் விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு.

கிளிநொச்சி பூநகரி பிரதேசசெயலகத்தில் கடமையாற்றும் கிராமசேவையாளர் பாலசிங்கம் நகுலேஸ்வரன் வயது 48 மற்றும் அவருடைய மனைவி நகுலேஸ்வரன் சுனிதாராணி நேற்று இரவு முழங்காவில் மன்னார் வீதியில் 8.10 மணியளவில் காட்டுவிலங்குடன் உந்துருளி மோதி விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

கிராம அலுவலர் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்தார்.மனைவி கிளிநொச்சி வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை ஜெயபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.