சீனாவில் இருந்து மேலும் பத்து இலட்சம் ‘சினோபார்ம்’ தடுப்பூசிகள் இலங்கைக்கு.

சீனாவில் இருந்து மேலும் பத்து இலட்சம் ‘சினோபார்ம்’ கொரோனாத் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன.

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துக்குச் சொந்தமான விசேட விமானத்தின் மூலம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை அவை வந்தடைந்தன என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் இருந்து தடுப்பூசிகள் இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் விசேட வாகனங்களின் மூலம் கொழும்பிலுள்ள களஞ்சியத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இதுவரை 31 இலட்சம் ‘சினோபார்ம்’ தடுப்பூசி மாத்திரைகள் இலங்கைக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, ரஷ்யாவில் தயாரிக்கப்படும் 65 ஆயிரம் ‘ஸ்புட்னிக் – வி’ தடுப்பூசிகள் எதிர்வரும் 11ஆம் திகதி இலங்கைக்குக் கொண்டு வரப்படவுள்ளன என்றும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.