சாலைப்பகுதியில் மோட்டார் எறிகணைகள் 15 மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டம் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாலை பகுதியில் மோட்டார் எறிகணைகள் சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து (11) கிளிநொச்சி சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சாலைப்குதியில் போரின் போது கைவிடப்பட்ட 60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகள்14, 81மில்லிமீற்றர் மோட்டார்குண்டு 1 அதற்குரிய வூஸ்டர் ஒன்றுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ள.

முல்லைத்தீவு நீதிமன்ற அனுமதி பெறப்பட்ட பின்னர் குறித்த எறிகணைகள் செயலிழக்கச் செய்யப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.