கூட்டமைப்புடனான பேச்சு கடைசி நேரத்தில் இரத்து!

கொழும்பு: இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் நாளை மாலை நடைபெறவிருந்த நேரடிப் பேச்சு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுப் பற்றிய விவரம் வெளிவந்ததால் தெற்கில் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட அழுத்தத்தையடுத்தே அவர் பேச்சை இப்போதைக்குத் தள்ளிப்போடும் முடிவை எடுத்திருக்கின்றார் எனக் கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய பேச்சுத் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி செயலகம் இன்று மாலை அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.