பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் சுற்றிவளைப்பு.

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளரின் வழிகாட்டலுக்கமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் யாழ்ப்பாணம், நாவற்குழி, தனங்கிளப்பு, கைதடி, நுணாவில் ஆகிய இடங்களில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டதோடு சட்டவிரோதமான செயலில் ஈடுபடும் வர்த்தகர் மீதும் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் உரம் தொடர்பான கள ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.