ஆடு மாடு போல் 7 வயது சிறுவன் விற்கப்பட்ட கொடூரம்! தமிழகத்தில் நடத்த அதிர்ச்சி சம்பவம்

தமிழகத்தில் 7 வயது சிறுவன் குழந்தை தொழிலாளியாக ரூ. 5,000-க்கு விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவல்களின்படி, 7 வயது சிறுவன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செல்லத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவன். அவன் மூன்று மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே எச்.ஹரிராஜின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

ஆட்டு மந்தை வைத்திருக்கும் ஹரிராஜ், சிறுவன் தனது மகன் என்று உள்ளூர்வாசிகளிடம் கூறியுள்ளார். அவர் தனது 150 ஆடுகளை மேய்க்க சிறுவனை அழைத்துச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த செவ்வாயன்று, சில உள்ளூர்வாசிகள் சிறுவன் அழுது கொண்டிருப்பதை கவனித்தனர். விசாரித்தபோது, ​ஹரிராஜின் 10 வயது மகன் தன்னை அடித்து தள்ளிவிட்டதாக கூறினார்.

அதன்பிறகு, அந்த 10 வயது சிறுவனை விசாரித்தபோது, ​​தனது தந்தை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் உதவியுடன் 7 வயது சிறுவனை ரூ.5,000-க்கு வாங்கியதாக கூறியுள்ளான்.

அதனை அடுத்து உள்ளூர்வாசிகளால் எச்சரிக்கப்பட்ட பின்னர், காவல்துறை அதிகாரிகள் மைனர் சிறுவனை மீட்டனர். பிறகு, அச்சிறுவன் குழந்தைகள் நலக் குழுமத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டு குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டான்.

ஆரம்ப விசாரணையில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கணேசன் என்ற இடைத்தரகர், ஹரிராஜுக்கு சிறுவனை பெற்றோரிடமிருந்து பெற உதவியதாகக் கூறப்படுகிறது. அவர் சிறுவனின் பெற்றோர் பற்றிய விவரங்களைக் கொடுத்தார்.

தூத்துக்குடிக்கு வந்த சிறுவனின் பெற்றோரை விசாரித்தபோது, அவர்கள் தங்கள் மகனை விற்கவில்லை என்றும் அவன் குழந்தை தொழிலாளியாக ஈடுபடுத்தப்பட்டது தெரியாது என்றும் கூறினர். மேலும், கணேசன் மூலமாக மகனுடன் தொலைபேசியில் தவறாமல் பேசிவந்ததாகவும் அவர்கள் கூறினர்.

இது குறித்து விசாரணை நடத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மைனர் சிறுவனின் பெற்றோர், ஹரிராஜ், கணேசன் மற்றும் பலர் பங்கு தீர்மானிக்கப்பட்ட பின்னர் வழக்கு பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.