சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த கார் – அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பத்தினர்

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார் 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவிகாபுரம் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார் இதில் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அஷ்ர புல்லா என்பவர் குடும்பத்துடன் சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்று பின்னர் அவர்களது சொந்த ஊரான எஸ்.ஆர்.கே.கார்டன் பெங்களூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது கார் மாதனூர் அடுத்த தேவிகாபுரம் என்ற இடத்தில் வந்தபோது திடீரென எஞ்சினில் இருந்து புகை வந்துள்ளது.

இதனை கவனித்த ஓட்டுநர் அஷ்ர புல்லா (வயது 46) என்பவர் உடனடியாக காரை நிறுத்தி அனைவரையும் கீழே இறக்கி உள்ளார் உடனடியாக தீ மளமளவென பரவி கார் முழுவதும் எரியத் தொடங்கியது அப்போது காரில் இருந்த 2 ஆண்கள் 2 பெண்கள் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் இந்த விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.