மாந்தை கிழக்கு பிரதேச காணிப்பயன்பாட்டுக்குழு கூட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவின் காணிப் பயன்பாட்டுக் குழு கூட்டம் நேற்று (29) நடைபெற்றுள்ளது.

மாந்தை கிழக்கு பிரதேச செயலர் என்.ரஞ்சனா தலைமையில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் பிரதேச சபை தவிசாளர் ம.தயானந்தன், காணிப்பிரிவு உத்தியோகத்தர்கள், பிரதேச சபைஉறுப்பினர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்பினை சேர்ந்தவர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளார்கள்.

இதன்போது மாந்தை கிழக்கு பிரதேச செயலக நியாயாதிக்கத்திற்குட்பட்ட பகுதிகளில் குத்தகைக்கு வழங்கப்பட்ட அரச காணிகளில் உரிமை கோரப்படாத காணிகள் தொடர்பாகவும் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.