வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 47பேருக்குக் கொரோனா! – நேற்று தொற்று 1,270.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய மேலும் 47 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நேற்று 1,270 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது எனச் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் 1,223 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவானதுடன், 47 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.

இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 69 ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் கொரோனாத் தொற்றிலிருந்து இதுவரை 2 இலட்சத்து 39 ஆயிரத்து 584 பேர் குணமடைந்துள்ளனர். 27 ஆயிரத்து 11 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.