கண்டி மாவட்டத்தில் மக்களுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

உடுநுவர பிரதேச சபைக் உட்பட்ட குறுத்தலாவ, வட்டப்பொல, கடலாதெனிய ஆகிய பகுதிகளுக்கு தடுப்பூசிகள்
கண்டி மாவட்டத்தில் உடநுவர பிரதேச சபைக்கு உட்பட்ட குறுத்தலாவ, வட்டப்பொல, கடலாதெனிய ஆகிய கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளிலுள்ள மக்களுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

குறுத்தலாவ கிராம உத்தியோகஸ்தர் பிரிவிலுள்ள மக்களுக்கு 3500 தடுப்பூசிகள் குறுத்தலாவ முஸ்லிம்ம மஹா வித்தியாலயத்திலும் வட்டப்பொல கிராம உத்தியோகஸ்ர் பிரிவிலுள்ள மக்களுக்கு 1500 தடுப்பபூசிகள் வட்டபொல சிங்கள சிங்கள மஹா வித்தியாலயத்திலும், கடலாதெனிய கிராம உத்தியோகஸ்தர் பிரிவிலுள்ள மக்களுக்கு 1500 தடுப்பூசிகள் ரஜமஹா விஹாரையிலும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த தடுப்பூசிகள் யாவும் இன்று நாளையும் வழங்கி வைக்கப்படும்.
இதில் அக்குறணை சபை தவிசாளர் காமினி தென்னகோன்.உபபிரதேச சபை தவிசாளர் எஸ்.எம். எஸ் முஹமட் சவ்பான் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் விசேடமாக பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

(இக்பால் அலி )

Leave A Reply

Your email address will not be published.