பொருளாதார நெருக்கடி நிலையில் இலங்கை; ஆசிரியரின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது!

“இலங்கை பொருளாதார நெருக்கடி நிலையைச் சந்தித்துள்ளது. இந்நிலையில், ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பை இப்போது வழங்குவது சாத்தியமில்லை. இதை ஒவ்வொரு ஆசிரியர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.”

இவ்வாறு அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை நான் 100 வீதம் ஏற்றுக்கொள்கின்றேன்.

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு உட்பட நலன்புரி நடவடிக்கைகளைச் செய்வதானால், மேலதிகமாக வரி விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

நாட்டில் மேலதிக வரி விதிப்புகளைச் செய்தால், பொதுமக்களே பாதிக்கப்படுவார்கள்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.