பிறந்து மூன்றே நாட்களான சிசுவொன்று கொரோனா தொற்றினால் உயிரிழப்பு.

பிறந்து மூன்றே நாட்களான சிசுவொன்று கொரோனா தொற்றினால் உயிரிழந்த சம்பவம் களுத்துறை பகுதியில் பதிவாகியுள்ளது.

இதன்படி ,களுத்துறை – வெலிபென்ன, பெலிவத்தகந்த பிரதேசத்தைச் சேர்ந்த சிசுவே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக அறியமுடிகிறது.

குறித்த சிசுவானது, பெற்றோருக்குப் பிறந்த முதல் குழந்தை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் ,நாகொடை வைத்தியசாலையின் சிறுவர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றதன் பின் வீடு திரும்பிய நிலையில் குழந்தை இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.