2ம் திகதி ஆசிரியர்கள் சேவைக்கு செல்ல முடியுமா?

2ம் திகதி முதல் அரச சேவை ஊழியர்களை வழமை போன்று பணிக்கு அழைப்பதற்கான சுற்று நிரூபம் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது ஆசிரியர்களுக்கு செலுபடியாகாது என கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி ,அரச சேவை நாளைமுதல் வழமைக்கு திரும்புகின்ற போதிலும், பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பாத நிலையிலேயே, ஆசிரியர்கள் சேவைக்கு அழைக்கப்படவில்லை.

பாடசாலைகள் திறக்கப்படுவதற்கான அறிவிப்பை, கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்ட பின்னரே, ஆசிரியர்களுக்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான உரிய சுகாதார வழிகாட்டி, சுகாதார சேவை பணிப்பாளரினால் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும் ,சுகாதார சேவை பணிப்பாளரின் அனுமதி கிடைத்ததன் பின்னரே, பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என அறிய முடிகின்றது.

Leave A Reply

Your email address will not be published.