குடும்ப சுகாதார அதிகாரிகள் 600 பேருக்குக் கொரோனா!

இலங்கையில் 600 இற்கும் மேற்பட்ட குடும்ப சுகாதார அதிகாரிகளுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது என அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நீர்கொழும்பு கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் குடும்பநல சுகாதார உத்தியோகத்தர் ஒருவர் இடப்பற்றாக்குறை காரணமாக நிலத்தில் மெத்தையை விரித்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

சுகாதார சேவையாளர்களைப் பாதுகாப்பதற்கு சுகாதார அதிகாரிகள் சரியான முறைமை ஒன்றை உருவாக்கவில்லை. இது கவலை தரும் விடயமாகும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.