கொரோனா தொற்றிய 906 கடற்படையினரில் 903 பேர் குணமடைவு !

கொரோன வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இரு கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர் என்று கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, குணமடைந்த கடற்படை உறுப்பினர்களின் எண்ணிக்கை 903ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 03 கடற்படை உறுப்பினர்களே வைத்தியசாலைகளில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் கடற்படை ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Comments are closed.