மஹிந்த அணிக்குள் கட்சி மோதல் – மொனராகலை மேடைக்கு வந்த பிக்குவின் எதிர்ப்பு (வீடியோ)

செவனகல பிரதேசத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்ட கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மொனராகலை மாவட்ட பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் ஜகத் புஸ்பகுமாரவிற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த குழப்பநிலை உருவானது.

கூட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது மேடையில் உரையாற்றிய பிக்கு ஒருவர் நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து வந்த எவருக்கும் வாக்களிக்க கூடாது என கூறினார். குறிப்பாக ஜகத் புஸ்பகுமார மீது அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதன்போது பிக்குவின் உரையை நிறுத்த முயற்சி செய்யப்பட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் ஜகத் புஸ்பகுமார உரையாற்றிய போது தாமரை மொட்டு கட்சியினர் ஹூ.. சத்தமிட்டு குழப்பினர்.

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு கலகம் அடக்கும் பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

உடனடியாக மேடையில் ஏறிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாங்கள் ஒன்று கூடியுள்ளோம். நமக்குள் மோதல் வேண்டாம் என அங்கு வந்தவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த கூட்டத்தை சசீந்திர ராஜபக்ஷ ஏற்பாடு செய்திருந்தார்.

வீடியோ :

Comments are closed.