இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்ட இசாலினியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுடன் உயிரிழந்த டயகம சிறுமி இசாலினியின் சடலம் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்ட சடலம் பேராதனை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதால் சடலம் மீண்டும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையில் இரண்டாவது அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.