அடுத்த இரண்டு வாரங்களில் டெல்டாவின் தாக்கம் தீவிரம் : போராசிரியர் சந்திம ஜீவந்தர எச்சரிக்கை

கொவிட் -19 திரிபடைந்த டெல்டா வைரஸின் தாக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் தீவிரமடையுமென டாக்டர், பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

மிகவும் முக்கியமானது உணவா? அல்லது ஒட்சிசனா? என்பது தொடர்பில் தீர்மானிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அடுத்த இரண்டு மூன்று வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கவையென அவர் தெரிவித்துள்ளார். 05 வினாடிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் கூட நமக்கு தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், இது பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.