கோப்பாய் : டிப்பர் மோதியதில் இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தம்பதியினரை பின்னால் வந்த டிப்பர் மோதியதில் இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் கோப்பாய் சந்திக்கு அண்மையில் முற்பகல் 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கோப்பாய் சந்தியில் உள்ள சமிக்ஞை விளக்கை கடந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த டிப்பர் மோட்டார் சைக்கிளை முந்த முற்படுகையில் டிப்பரில் மோட்டார் சைக்கிள் உரசியதால் மோட்டார் சைக்கிள் சரிந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த பெண் விழுந்ததில் டிப்பர் சில்லினுள் அகப்பட்டு தலை பகுதி நசுங்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இதில் சித்தங்கேணியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணே உயிரிழந்துள்ளார்.

கணவர் உயிர்தப்பியுள்ளார். இவர் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார்.
டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

படங்கள் : செ.நிரூஜன்

Leave A Reply

Your email address will not be published.