வீதிகளில் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள் .. மக்களை சாகடித்த பின் , பொருளாதாரத்தை வளர்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை : உபுல் ரோஹனா

இலங்கையின் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், நாட்டின் சுகாதார அமைப்பின் திறன் குறைந்துவிட்டது எனவும் , தங்களால் எதையும் செய்ய முடியாத கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தற்போது மக்கள் வீதிகளில் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று அதன் தலைவர் உபுல் ரோஹண கூறினார்.

நாட்டை மீண்டும் மூடுமாறு அரசாங்கத்தை கேட்கமாட்டேன் என்று கூறிய அவர், நிலைமையைப் புரிந்துகொண்டு சுய பயணக் கட்டுப்பாடுகளை தங்களுக்குள் விதித்துக் கொள்ளுமாறு மக்களை வலியுறுத்தினார்.

தனது வாழ்க்கையில் ஆசை இருந்தால், வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று கடுமையாக வலியுறுத்துவதாகவும் அவர் அறிவுரை சொல்வதாக தெரிவித்த அவர் , மேலும் மக்களை சாகடித்த பின் , பொருளாதாரத்தை வளர்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றார் அவர்.

இணைய தள கலந்துரையாடலில் பங்கேற்ற போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.