வவுனியாவில் மேலும் இருவர் கொரோனாத் தொற்றால் பலி!

வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர் என்று சுகாதார திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனாத் தொற்றுக்குள்ளான நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவரே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

ஒலுமடு பகுதியைச் சேர்ந்த 87 வயதுடைய பெண் ஒருவரும், இராசேந்திரங்குளம் பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு மரணமடைந்தவர்களாவர்.

இருவரினதும் சடலங்களை சுகாதார முறைப்படி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.