பல அரசியல் ஜாம்பவான்கள் தோல்வி அடையும் நிலையில் தேசிய பட்டியலூடாக பாராளுமன்றம் வர முயற்சிக்கின்றனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

அரசியல் ஜாம்பவான்கள் என கூறிக் கொண்டவர்கள் தமது தோல்வி உறுதியடையும் நிலையில் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு வரமுயற்சிப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணயின் தலைவர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மெதகம பிரதேசத்தில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெமுரன கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனது ஆட்சிக்காலத்தில் கட்டிய பல திட்டங்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் போது விற்பனை செய்து விட்டதாகவும் கூறிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி திணித்த அழுத்தங்கள் காரணமாக தாமரை மொட்டு சின்னத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை அமைத்து உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்றதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன் போது சுட்டிக்காட்டினார்.

Comments are closed.