72 ஆண்டுகளாக வாக்களித்த எமது நாட்டுக்கு மக்களுக்கு என்ன நடந்திருக்கின்றது? அநுரகுமார திசாநாயக்க கேள்வி

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் இந்த நாடு பல்வேறு அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கிரிபேரிய கலே பகுதியில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

மூதாதையர்கள் 72 ஆண்டுகளாக வாக்களித்ததன் ஊடாக அரசாங்கம் ஒன்றை அமைத்து நாம் திருப்தியடைகிறோம்.

தேவையான அரசாங்கம் வந்ததாக நினைக்கின்றோம். தமது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாத போது அவர்கள் மீண்டும் சளைத்துவிடுவதாகவும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

72 ஆண்டுகளாக இவ்வாறு செயற்பட்ட எமது நாட்டுக்கு இன்று என்ன நடந்திருக்கின்றது? ஒரு நாட்டுக்கு ஏற்பட கூடிய அத்தனை அழிவுகளும் ஏற்பட்டு விட்டதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

Comments are closed.