குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள் 10 பேருக்குக் கொரோனா!

பேருவளை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தில் பணியாற்றும் குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள் 10 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்றுக்குள்ளான அதிகாரிகள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

குறித்த அதிகாரிகளுக்குப் பதிலாக ஏனைய அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.